வாகனத்தில் FASTag-ஐ முறையாக பொருத்தாத பயனர்களிடம் இருந்து இருமடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், சிலர் வாகன கண்ணாடிகளில் FASTag-ஐ முறையாக பொருத்தாததால் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தேவையற்ற தாமதத்தால், பிறருக்கு இடையூறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது. இதனால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.