ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ரயில்களின் அட்டவணை மாற்றப்படும். அதில், புதிய ரயில்கள் தொடர்பான அறிவிப்புகள் கூட வெளியாகும். ஆனால், இந்த ஆண்டுக்கான அட்டவணை மாற்றம் 2025, ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும் என்று சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக புதிய அட்டவணை தயாரிக்கும் பணி தாமதமாவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.