ஆண்டுதோறும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்தாலும் அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். விஷச்சாராயத்தால் தமிழ்நாட்டில் இனி ஒரு மரணம் கூட நிகழக்கூடாது என்ற அவர், அமைச்சர் பொறுப்பில் உள்ள துரைமுருகன் போன்றவர்களே, குடியை ஊக்குவிப்பது போல் பேசுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாக சாடியுள்ளார்.