தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன் என ஓபிஎஸ் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர் செல்வம் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவரும், இலங்கை நாட்டின் மூத்த அரசியல்வாதியுமான திரு. ஆர். சம்பந்தன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
இலங்கைத் தமிழர்களின் சம உரிமைக்காக பாடுபட்ட திரு. சம்பந்தன் அவர்களின் மறைவு இலங்கைவாழ் தமிழர்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. திரு. சம்பந்தன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களுக்கும், இலங்கைவாழ் தமிழர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.