இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு தெற்கே கேப் டவுன் நகரில் இருந்து 2,500 கிலோமீட்டர் தொலைவில் கடலின் ஆழத்தில் இருந்து உருவான இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. நிலநடுக்க பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.