ஒடிசா முன்னாள் ஆளுநர் முரளிதர் சந்திரகாந்த் பண்டாரே (95) வயது முதிர்வு காரணமாக காலமானார். மகாராஷ்டிராவின் மூத்த காங்கிரஸ் தலைவரான அவர் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார் அத்துடன் 3 முறை ராஜ்ய சபை எம்பி யாகவும் பதவி வகித்திருக்கிறார். அவரது மறைவுக்கு முதல்வர் மோகன் சரண் மஜி நவீன் பட்நாயக் சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.