அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “நேர்மையும் எளிமையும் தன் அருங்குணங்களாக கொண்டு, தன் வாழ்வையே அக்குணங்களுக்காண இலக்கண பாடமாக்கி , வறுமை வாட்டிய போதும் தன் செம்மை வழுவாமல் வாழ்ந்த முன்னாள் அமைச்சர், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருவாழ்வு வாழ்ந்த தியாகசீலர் #கக்கன் அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் பெருமையை போற்றி வணங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.