அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை கற்பித்தல், பள்ளி நிர்வாகத்தை கவனிப்பதற்கு மட்டும் ஈடுபடுத்துமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில், HMகளுக்கு சில நிர்வாகப் பொறுப்புகள் இருந்தாலும், அவர்களின் முதன்மை கடமை கற்பிப்பது தான் எனக் குறிப்பிட்ட கோர்ட், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை சாதாரண மனிதர்களை போல நடத்தக் கூடாது என அறிவுரை வழங்கியுள்ளது.