வயநாடு நிலச்சரிவு குறித்து விசாரிக்க தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளது. நிலச்சரிவு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிந்து, விரைவில் பட்டியலிட பதிவாளருக்கு, பசுமை தீர்ப்பாய உறுப்பினர்களை கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நிலச்சரிவு பகுதிகளில் உள்ள சுரங்கம், சாலைகள், குவாரிகள் குறித்த விவரங்களைத் தயாரிக்க கேரள அரசுக்கு தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.