நீட் புகார்களுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என எம்.பி சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்தால் அயோத்தி ராமரையே பாஜகவினர் கை கழுவி விடுவார்கள் என்றும், ராமர் கோயில் உள்ள தொகுதியில் வென்ற காங். எம்.பி மோடிக்கு எதிரே அமர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களவையில் முன்பு ஜெய்ஸ்ரீராம் கோஷம் காதைப் பிளக்கும் என்றும் தற்போது சப்தநாடிகளும் அடங்கிப்போயுள்ளதாகவும் அவர் கூறினார்.