பெண் ஒருவர் தனக்கு செய்வினை வைத்ததாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் சதீஷ்குமார் புகார் அளித்துள்ளார். பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து, தமிழ்நாடு எங்கும் பிரபலமானவர் சதீஷ். சமீபத்தில் பெண் ஒருவர் தன்னுடன் செல்பி எடுக்க கேட்ட போது மறுத்ததால், தனது வீட்டில் செய்வினை வைத்திருப்பதாக அப்பெண் மிரட்டியதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் அளித்துள்ளார்.