டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வர்கள் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கோச்சிங் சென்டர் உரிமையாளர் அபிஷேக் குப்தா கைது செய்யப்பட்டுள்ளார். ஐஏஎஸ் பயிற்சிக்கு கட்டடத்தின் அடித்தளத்தில் தங்கி படித்துக் கொண்டிருந்த 3 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்த நிலையில், கட்டட விதிமீறல் நடைபெற்றுள்ளதாக கூறி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.