வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் காளிதாஸின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ₹3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நீலகிரியை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ள நிலையில், அவருடைய குடும்பத்தினருக்கும் நிவாரண நிதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை மொத்தம் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.