ஆடி மாத பூஜையை முன்னிட்டு வருகிற 15ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. 16ஆம் தேதி இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும் எனவும் 20ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது மேலும், கேரளாவில் ஆடி 1, ஜூலை 16ல் வருவதால், ஆன்லைன் முன்பதிவில் தேதி மாற்றத்தை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.